இந்த வலை தளத்திற்க்கு வரும் யாவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்

web stats

Friday, August 14, 2015

Tuesday, March 31, 2015

குறளின் பெருமை




குறளின் பெருமை  அதனால் வள்ளுவர்க்கு கிடைத்த அங்கீகாரம்
அவர் தந்த முதல் குறளாந கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

Thursday, March 26, 2015

இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு









இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு  இது சுத்தமான அல்லது தூய்மையான இந்தியா என்ற தலைப்பில் இந்திய தபால் அஞ்சல் தலை போட்டி மேற்குறிப்பிட்ட தலைப்பில் இந்திய வாழ் பொது மக்களுக்கு அறிவித்த போட்டியில் +2 மாணவரான எம்.வைபவ் ஷெனாய் என்ற இளைங்ஞறுக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்பட்டது. இவ்விளைங்ஞர்  கர்நாடக மாலினமான மங்களூ ரைச்சார்ந்த  இளைஞர். இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த பரிசுகளை வென்றுள்ளார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இவர் இளைங்ஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதைத்தவிர மற்ற இரு அஞ்சல் தலைகளும்  




  





Wednesday, March 25, 2015

இன்றைய அரசாங்கத்தின் பார்வையில் தூய்மை இந்தியாவும் அஞ்சல் தலையும்


                       




இன்றைய அரசாங்கத்தின்  பார்வையில் தூய்மை இந்தியாவை  அஞ்சல் தலையின் வாயிலாக   மக்களிடம் பரப்ப ஒரு உக்தியை கையாண்டுள்ளது. இது ஒரு எளிய முறை மட்டுமல்லாமல் சிறுவர்கள்  மத்தியில்  ஒரு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக சிறுவர்களிடமிருந்து போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வண்ண ஓவியங்களைப்  பெற்று சிறந்த அச்சு எந்திரங்கள் மூலமாக அச்சடிக்கப்பட்டு அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டிற்க்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அண்ணல் காந்தி மறைந்த ஜனவரி 30ம் தேதி ஆகும். இந்த அஞ்சல் முகப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அண்ணல் காந்தியின் சிறப்பு சின்னமான காதில் அணியும் கண்ணாடியை முகப்பின் மேல் பதித்து வெளியிட்ட  தேதியுடன் கூடி  சிறப்பிற்கும் வகையில் மேலும் பெருமை சேர்த்துள்ளது.  இந்த அஞ்சல் தலையின் முகப்பை யாவரும் காணும் விதத்தில் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 24, 2015

தபால் தலை சேகரிப்பது இன்றைய தலைமுறைக்கு பொருந்துமா





தபால் தலை சேகரிப்பது இன்றைய தலைமுறைக்கு பொருந்துமா என்ற கேழ்வி எழலாம்.

ஆனால் இக் கேழ்வி தேவையற்ற  ஒன்று. நிச்சையமாக எக்காலத்திற்க்கும் இது  பொருந்தும் அதுமட்டுமல்லாமல் இது ஒரு உன்னத பொழுதுபோக்கு அம்சம்  அல்லது செயல் . இது யாவரிடமும் ஒரு பரஸ்பர ஒற்றுமையை விளைவிக்கும். காரணம் ஒருவரிடமில்லாத  ஒன்றை பிறரிடமிருந்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம் . இதனால் ஒற்றுமை உணர்வு வளரும் மேலும் பரஸ்பர சிந்தனை திறன்  ஓங்கும்.. 
உதாரணத்திற்கு சில குறிப்பிட்ட தபால் அஞ்சல் தலைகளின் பிம்பங்கள்   மேலே காட்டப்பட்டுள்ளது இவை யாவுமே சிறுவர்களை மையமாக கொண்டவை. இவை சிறுவர்களின் மத்தியில் ஒரு சேகரிப்பு திறமையை நிச்சயமாக உருவாக்கும் என்ற நோக்குடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Monday, March 23, 2015

தபால் தலை சேகரிப்பதின் நோக்கம்








தபால் தலை சேகரிப்பது என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டும் அல்ல அதில் கிடைக்கும் சந்தோஷம்  ஒரு அலாதியானது. இதற்க்கு உதாரணமாக ஒரு தபால்தலையின் முகப்பை இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் எவ்வாறு சிறுவர்கள் முழுமனத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இத் தபால் தலை வெளியிடப்பட்ட நாள் சிறுவர்கள் தினத்தை ஒட்டியதாகும். இது ஒரு உதாரணமேயன்றி முழுமையான செய்தியல்ல.